புலம்பெயர்ந்து வசிக்கும் ஒருவர் தமக்குச் சொந்தமான காணியை நன்கொடையாக வழங்கியுள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து லண்டனில் வசிப்பவருமான
ஆனந்தகுமாரராசா என்பவர் கிளிநொச்சி பன்னங்கண்டியை அண்மித்த பகுதியில் சொந்தக் காணி இல்லாததால் வீட்டுத் திட்டத்தைப் பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் இருந்த வறிய குடும்பம் ஒன்றுக்கு கால் ஏக்கர் காணியை நன்கொடையாக வழங்கினார்.
மேலும் மகி ழங்காடு கமக்கார அமைப்பின் அலுவலகத்தை அமைப்பதற்கும் விவசாயிகள் நெல்லைக் காயவைகாப்பதற்ன தளத்தை அமைப்பதற்கு கால் ஏக்கர் காணியையும் வழங்கினார்.
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ஊடாக நேற்றுமுன்தினம் முற்பகல் 10 மணிக்கு இந்தக் காணிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.