ஆசிய தடகளப் போட்டி சென்னையிலிருந்து கொழும்புக்கு மாற்றம்
தமிழகத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் இடம்பெறவிருந்த ஆசிய தடகளப் போட்டி கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னையில் நடைபெறவிருந்த 20வது ஆசிய தடகளப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க கூடாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
மேலும் இலங்கை வீரர்கள் பங்கேற்பதால் போட்டியை தமிழகத்தில் நடத்த முடியாது எனவும் அறிவித்திருந்தது.
இதனையடுத்து ஆசிய தடகள சம்மேளனம் அப்போட்டியை கொழும்பில் நடத்த முடிவு செய்துள்ளது.
இப்போட்டியின் முதல் 2 சுற்றுகள் தாய்லந்தில் நடைபெறுகின்றன. மூன்றாவது சுற்று போட்டிகள் சென்னைக்கு பதிலாக கொழும்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.