புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2013


தென்னிந்திய சினிமாவிற்கு சூர்யா - கார்த்தி 1 கோடி நன்கொடை 
இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு நூறாவது ஆண்டு.  இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமாவிற்கு முக்கிய பங்கு உண்டு என்பதால், சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, இந்திய சினிமாவின் நூற்றாண்டை
என்றும் நினைவில் இருக்கும்படி கொண்டாடுகிறது.


இந்திய சினிமா நூற்றாண்டில் நினைவுச்சின்னங்களாக இருபெரும் மாளிகைகளை எழுப்புகிறது. முதல் மாளிகை நிறைவுற்று தமிழக் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. 


இரண்டாவது மாளிகை இந்த ஆண்டில் நிறைவு பெற்று தமிழக முதல்வரால் திறக்கப்பபடவிருக்கிறது.    இதற்காக இந்த நூற்றாண்டு மாளிகையில் திரையரங்கை கட்ட நடிகர்கள் சூர்யா மற்றும் அவரது சகோதரர் கார்த்தியும்  ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.
நன்கொடையாளர்களின் பெயர்களை கல்வெட்டில் வைக்க தீர்மானம் செய்து இருவரின் பெயரும் வைக்கப்படும் என்றார்கள்.  அதற்கு சூர்யாவும் கார்த்தியும்,  அவர்களது பெற்றோர்களின் பெயர்களை பதிவு செய்யவும் என்றனர்

ad

ad