புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2013


இலங்கைப் பணிப் பெண் ஒருவர் சவூதி அரேபியாவில் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
காலி கந்துகொட லுனுவேல்வத்த என்னும் இடத்தைச் சேர்ந்த 45 வயது பெண்ணே சவூதி அரேபியாவுக்கு தொழில் நிமித்தம் சென்று சித்திரவதைக்கு
உள்ளாக்கப்பட்டுள்ளார்.
வீட்டு எஜமானியும் அவரது பிள்ளைகளும் இணைந்து குறித்த இலங்கைப் பணிப்பெண்ணை நிர்வாணமாக்கி, வீட்டு எஜமான் பிரம்பால் கடுமையாக தாக்குதல் மேற்கொள்வதை கைத்தொலைபேசியில் படமெடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சித்திரவதைகளை தாங்க முடியாத குறித்த பெண், அந்நாட்டு பொலிஸில் முறைப்பாடு செய்து நாடு திரும்பியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தற்போது காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad