புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2013

ஊனமுற்ற பெண்போராளிகளை கொன்ற இராணுவம்: புது ஆதாரங்கள் !(படங்கள் இணைப்பு)
போரின் இறுதிக்கூட்டத்தில் இலங்கை இராணுவம் புரிந்த அட்டூழியங்கள் பல. பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தினார்கள். பல பெண் போராளிகளைக் கற்பழித்தார்கள். இன்னும் பல கொடுமைகளைச் செய்தார்கள். இவர்கள் பார்வையில் இருந்து ஊனமுற்றவர்கள் கூட தப்பவில்லை. 


இறுதிக்கட்டப் போரில் வெள்ளமுள்ளவாய்க்காலுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில்இ ஊனமுற்ற பெண்போராளிகள் இருந்திருக்கிறார்கள். இவர்களில் பலர் 3 வருடங்களுக்கு மேல் போராட்டத்திலும் ஈடுபடவே இல்லை.

இவ்வாறான ஒரு நிலையில் இவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது இலங்கை இராணுவம் பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
குறிப்பிட்ட இவ்வீட்டில் இருந்த சுமார் 7க்கும் மேற்பட்ட ஊனமுற்ற பெண்போராளிகள் கொல்லப்பட்டு உள்ளார்கள்.

இவர்களில் ஒருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். அத்தோடு அவர்கள் தங்கியிருந்த இடங்களும் தெரியவந்துள்ளது. இவை புதிய போர்குற்ற ஆதாரங்கள் ஆகும்.





ad

ad