புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2013

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியுமான குருநாத் மெய்யப்பன். கைது செய்யப்பட்ட குருநாத் மெய்யப்பனை மும்பை போலீசார் 25.05.2013 சனிக்கிழமை மதியம் மும்பை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். இதையடுத்து வரும் 29ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. 
இந்த நிலையில் சென்னையில் உள்ள குருநாத் மெய்யப்பன் வீட்டில் 26.05.2013 ஞாயிற்றுக்கிழமை மும்பையில் இருந்து வந்த 4 பேர் கொண்ட மும்பை போலீசார் சோதனையை மேற்கொண்டனர். 

ad

ad