புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2013


ஸ்ரீசாந்த் பெண்களுடன் கும்மாளம் போட்ட மும்பை ஹோட்டலில் ரெய்டு! தொடரும் கைது.. விரியும் போலீஸ் வலை

மும்பை/டெல்லி: டெல்லியில் மையம் கொண்ட ஸ்பாட் பிக்சிங் புயலானது சென்னை, மும்பை என இந்திய நகரங்களைக் கடந்து உலக அளவிலும் விரிவடைகிறது
…மும்பையில் ஸ்ரீசாந்த் பெண்களுடன் கும்மாளம் போட்ட நட்சத்திர ஹோட்டலில் போலீசார் ரெய்டு நடத்தினர். மும்பையில் மேலும் ஒரு புக்கியையும் கைது செய்துள்ளனர். ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் புகாரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் ஆகிய வீரர்கள் சிக்கினர். அவர்களுடன் புக்கிகள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 6 பேரும் அடக்கம். இருப்பினும் இந்த விவகாரம் தற்போதைக்கு ஓய்வதாக இல்லை. பெரும் புயலையே கிளப்ப இருப்பதாகவே தெரிகிறது. மேலும் 8 முதல் 25 வீரர்களுக்கும் பிக்சிங், பெட்டிங்கில் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது

.

ad

ad