புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2014


ஆஸியுடனான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்:

தென் ஆபிரிக்க அணி அபார வெற்றி


தென் ஆபிரிக்கா-அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் கடந்த 20-ம் திகதி தொடங்கியது.
இதில் முதல் இன்னிங்சில் தென்ஆபிரிக்கா 423 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 246 ஓட்டங்களும் எடுத்தன. 177 ஓட்டங்கள்; முன்னிலையுடன்
2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆபிரிக்கா 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 192 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஹ'pம் அம்லா 93 ஓட்டங்களுடன் களத்தில் நின்றார்.
இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. தொடர்ந்து ஆடிய அம்லா தனது 21-வது சதத்தை நிறைவு செய்தார். தென்ஆபிரிக்க வீரர்களில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் கலிஸ் (45 சதம்), தலைவர் கிரேம் சுமித் (27 சதம்) ஆகியோருக்கு அடுத்து கெரி கேர்ஸ்டனுடன் (21 சதம்) 3-வது இடத்தை அம்லா பகிர்ந்து கொண்டுள்ளார்.
அம்லாவுக்கு ஒத்துழைப்பு தந்து ஆடிக் கொண்டிருந்த குயின்டான் டீ காக் 34 ஓட்டங்;களில் பிடி ஆனார். மதிய உணவு இடைவேளைக்கு 40 நிமிடங்களுக்கு முன்பாக தென்ஆபிரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 270 ஓட்டங்களுடன் 2-வது இன்னிங்சை இடைநிறுத்தியது. அம்லா 127 ஓட்டங்களுடன் (176 பந்து, 16 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி நாளில் பலத்த மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்ததாலேயே தென்ஆபிரிக்கா 2-வது இன்னிங்சை சீக்கிரமாக முடித்துக் கொண்டது.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 448 ஓட்டங்;கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டெஸ்ட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் இவ்வளவு பெரிய ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்ததில்லை. இமாலய இலக்கை நோக்கி கிறிஸ் ரோஜர்சும், டேவிட் வோர்னரும் அவுஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்சை தொடங்கினர். அதிரடி காட்டிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 126 ஓட்டங்கள் எடுத்து நல்ல தொடக்கம் அமைத்து தந்தனர். வோர்னர் 66 ஓட்டங்களில் (73 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), சுழற்பந்து வீச்சாளர் டுமினியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யு+. ஆனார்.
தொடக்க ஜோடி பிரிந்ததும், தென்ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் தலைதூக்கியது. ஒரு பக்கம் கிறிஸ் ரோஜர்ஸ் போராடிக் கொண்டிருக்க மறுமுனையில் அலெக்ஸ் ^லன் (5), n'hன் மார்ஷ் (0), தலைவர்; மைக்கல் கிளார்க் (1), ஸ்டீவன் சுமித் (0), விக்கெட் காப்பாளர் பிராட் ஹேடின் (1), மிட்செல் nஜhன்சன் (6), ரையான் ஹரிஸ் (6 ) வரிசையாக நடையை கட்டினர்.
இதற்கு மத்தியில் தனது 4-வது சதத்தை அடித்த கிறிஸ் ரோஜர்ஸ் (107 ஓட்டங்கள்;, 237 பந்து, 12 பவுண்டரி) 9-வது விக்கெட்டாக ரன்-அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து நாதன் லயன் (0) கடைசி வீரராக வெளியேற அவுஸ்திரேலிய அணி 73.4 ஓவர்களில் 216 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் தென்ஆபிரிக்க அணி 231 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அவுஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களை தவிர வேறு யாரும் இரட்டை இலக்கை தொட வில்லை.
தென்ஆபிரிக்க தரப்பில் ஸ்டெயின் 4 விக்கெட்டுகளும், பிலாண்டர் 2 விக்கெட்டுகளும், மோர்கல், டுமினி, எல்கர் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆபிரிக்கா 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது.
போர்ட்எலிசபெத்தில் நேற்று மழை கொட்டி தீர்க்கும் என்றும், மழை பெய்ய 90 சதவீதம் வாய்ப்பிருப்பதாகவும் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதனை மனதில் கொண்டு விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 4-வது நாளிலேயே அவுஸ்திரே லியாவின் கதையை முடித்து விட்டது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற முதலாம் திததி கேப்டவுனில் தொடங்குகிறது.

ad

ad