புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2014

பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர சுகாதார உத்தியோகத்தர்கள் 
தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டிருந்த குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் நாளை முதல் வழமையான தங்களின் கடமைகளில் ஈடுபடவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

 
குடும்ப நல சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
 
தாதியர்களுக்கு மகப்பேற்று பயிற்சிகளை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் இந்த தொழிற்சங்க போராட்டத்தை நடத்தி வந்திருந்தனர்.
 
இந்தவிடயம் தொடர்பில் நேற்றைய தினம் தமது சங்கத்துக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றதாகலும், இதன் போது இரண்டு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad