புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2014


நெஞ்சை பிழியும் செய்தி 
பிரதமராக பதவியேற்க நரேந்திர மோடி டெல்லி பயணம்: வாழ்த்தி வழிசெலவுக்கு பணம் கொடுத்த தாயார்

இந்திய பிரதமராக வரும் திங்கள்கிழமை பதவியேற்க உள்ள நரேந்திர மோடி, தனது சொந்த மாநிலமான குஜராத்தை விட்டு விடைபெற்றார். டெல்லி புறப்படும் முன்பு
தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது மோடிக்கு இனிப்பு ஊட்டிய அவரது தாயார், மக்களின் நலனுக்காகவும், தேசத்தின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.


டெல்லியில் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு, தாயார் என்ற முறையில் வழிசெலவுக்கு சிறிதளவு பணத்தையும் வழங்கினார். அதனை மறுக்காமல் வாங்கிக்கொண்ட நரேந்திர மோடி, பின்னர் தனது தாயார் மற்றும் உறவினர்களோடு சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
இதையடுத்து டெல்லி புறப்பட்ட நரேந்திர மோடி, குஜராத் மக்களிடம் பிரியாவிடை பெறும் விதமாக குட்பை குஜராத் என்று கூறினார்.

ad

ad