புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2014

கொக்குவில் காமாட்சி வெற்றி

கொக்குவில் காமாட்சி விளையாட்டுக் கழகத்திற்கும் கொழும்பு ஆனந்தா கிரிக்கெட் கழகத்திற்குமிடையிலான கிரிக்கெட் போட்டியில் சுஜனின் அதிரடி அரைச்சதம் கைகொடுக்க கொக்குவில் காமாட்சி விளையாட்டுக் கழகம் அபாரமாக வெற்றியீட்டியது.

இப் போட்டி கடந்தவாரம் மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. 35 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே இப் போட்டி இடம்பெற்றது.

போட்டியில் நாணயற்சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ஆனந்தா கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பாடியது.

இதன்படி துடுப் பாடிய கொழும்பு ஆனந்தா கிரிக்கெட்  கழகம் நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் கொழும்பு ஆனந்தா கிரிக்கெட்  கழகம் சார்பில் இந்திர 62 ஓட்டங்களையும், யசோ 41 ஓட்டங்களை யும், அரவிந்த 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கொக் குவில் காமாட்சி விளையாட்டுக் கழகம் சார்பில் சுரேந்திரன் 3 விக் கெட்களையும், தீபநாதன் 2 விக்கெட்களையும், கேதீஸ் மற்றும் சுஜன் தலா ஒவ்வொரு விகn;கட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 35 ஓவர்களில் 164 என்னும் வெற்றி இலக் கோடு துடுப்பாடிய கொக்குவில் காமாட்சி விளையாட்டுக் கழகம் 5 விகn;கட்களை மாத்திரம் இழந்த நிலையில் இலகுவாக வெற்றி இலக்கை தொட்டது.

அணி சார்பில் சுஜன் அதிரடியாக 59 ஓட்டங்களையும், தர்ஷன் 34 ஓட்டங்களை யும், திவாகர் 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கொழும்பு ஆனந்தா கிரிக்கெட்  கழகம் சார்பில் டினோ 2 விக்கெடகளையும், சஜீட் 2 விககட்டையும் கைப்பற்றினர்.      
 

ad

ad