இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார். ஆசிரமத்திற்கு வந்த பான் கி மூனுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து காந்தி தங்கியிருந்த அறை, அவர் பயன்படுத்திய பொருட்களை அவர் பார்வையிட்டார். பின்னர் குஜராத் மாநில சிறப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.