இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளரான அரசாங்க பத்திரிகையான டெய்லி நியூஸின் ஆசிரியர் தினேஸ் வீரவன்ச மற்றும்
சண்டே ஒப்சேவரின் ஆசிரியர் ஆகியோர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வி கண்ட நிலையில் இவர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களான இவர்கள் இருவரும் இன்று பணிகளுக்கு வரவில்லை.
இந்தநிலையில், எதிரணியின் வெற்றி என்பது வெறுமனே மாயை என்று ராஜ்பால் தேர்தல் தினத்தன்று குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை ஐடிஎன் நிறுவன தலைவர், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்க, ஐடிஎன் உதவி பொது முகாமையாளர் சுதர்மன் ராடாலியாகொட ஆகியோரும் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.