நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமம் முன்பு, கன்னட அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சியைச் சேர்ந்த சங்கீதா என்ற இளம்பெண் பிடதி ஆசிரமத்தில் மரணம் அடைந்தார். இந்த மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். நித்தியானந்தாவையும், ரஞ்சிதாவையும் கைது செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.