புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2015

சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் நாட்டை விட்டு ஓட்டம்


சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரச ஊடகமான சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் அனுர சிறிவர்த்தன இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நேற்று இரவு அனுர சிறிவர்த்தன சிங்கப்பூர் சென்றுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற காலத்தில், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிகழ்ச்சிகள் செய்திகள் ஊடாக சுயாதீன தொலைக்காட்சி கடுமையாக விமர்சனம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பிலும் சுயாதீன தொலைக்காட்சி கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad