புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2015

மைத்திரி அரசுக்கும் தொடரப் போகும் ஜெனீவா சோதனை


சர்­வ­தேச அரங்கில், ஜனா­தி­பதி தேர்­த­லுக்குப் பிந்­திய இலங்­கையின் எதிர்­காலம் எவ்­வாறு இருக்கும் என்ற வினா இப்­போது எழுந்­தி­ருக்­கி­றது.
இந்தப் பத்தி எழு­தப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் போது, ஜனா­தி­பதி தேர்தல் முடி­வுகள் வெளி­வந்து கொண்­டி­ருந்­தன.
இந்தப் பத்தி அச்­சுக்கு செல்ல முன்­னரே, புதிய ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வா­கி­விட்டார்.
இந்த ஜனா­தி­பதி தேர்தல் முடிவு என்­பது உலகின் பெரும்­பா­லான நாடு­களால் உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­பட்டு வந்­தது.
போருக்குப் பின்னர், இலங்­கை­யுடன் கொண்­டி­ருந்த சாத­க­மான அல்­லது பாத­க­மான உற­வு­களைக் கருத்தில் கொண்டே, பெரும்­பா­லான நாடு­களின் கவனம் இலங்கை மீது குவிந்­தி­ருந்­தது,
இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில் மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்கம் சீன சார்பு நிலையில் இருந்­த­தை­யிட்டு கவலை கொண்­டி­ருந்­தது, எனவே, அடுத்து யார் பத­விக்கு வருவார் என்ற கவலை அதற்கு இருந்­தது.
சீனாவைப் பொறுத்­த­வ­ரையில், தமது செல்­லப்­பிள்­ளை­யாக இருந்த மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்கம் வீழ்ச்சி கண்டுவிட்டால், தமது முத­லீ­டு­களின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யாகி விடுமே என்று கவலை கொண்­டி­ருந்­தது.
அவுஸ்தி­ரே­லி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், அக­திகள் பட­கு­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பாக மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்­கத்­துடன் கொண்­டுள்ள உறவு தொட­ருமா என்ற அச்­சத்தில் இருந்­தது.
அமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட மேற்­கு­லக நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில், ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்தால், பொறுப்­புக்­கூறல் உள்­ளிட்ட மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்­கத்­துடன் இது­வரை இழு­ப­றிப்­பட்ட விவ­கா­ரங்­க­ளுக்கு சுமு­க­மாக தீர்வு காணலாம் என்று எதிர்­பார்த்­தன.
ஆக, ஒவ்­வொரு நாடும், தமது நலன் அல்­லது இலங்கை தொடர்­பான தமது கொள்­கையின் அடிப்­ப­டையில், சாத­க­மான விட­யங்கள் பறிபோய் விடுமோ, பாத­க­மான நிலை உரு­வாகி விடுமோ என்று அஞ்­சின.
அல்­லது தமக்குச் சாத­க­மான நிலை உரு­வா­கலாம் என்ற எதிர்­பார்ப்பில் இருந்­தன.
இதனால் தான், உல­கத்தின் பல நாடு­களின் கண்கள் இலங்­கையின் ஜனா­தி­பதி தேர்­தலின் மீது குவிந்­தி­ருந்­தன.
இலங்­கையில் ஆட்­சி­மாற்­றத்தை நிகழ்த்த வெளி­நா­டுகள் சதி செய்­வ­தா­கவும், உள்­நாட்டு விவ­கா­ரங்­களில், தலை­யீடு செய்­வ­தா­கவும், மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்கம் கடு­மை­யான பிர­சா­ரங்­களை முன்­னெடுத்­தி­ருந்தது.
ஆனால், இந்த தேர்­தலில் சர்­வ­தேச சமூகம் அவ்­வ­ள­வாகத் தலை­யீடு செய்­யவோ, தமது கருத்தைத் திணிக்­கவோ முனை­ய­வில்லை என்­பதே உண்மை.
மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்­கத்தின் சீன சார்புக் கொள்கை மற்றும், மேற்­கு­ல­குடன் முரண்­படும் போக்கு என்­பன ஆட்­சி­மாற்­றத்­துக்கு வெளியில் இருந்து உந்­துதல் கொடுப்­ப­தற்­கான வாய்ப்பு ஒன்றை உரு­வாக்­கி­யி­ருந்­தது உண்­மையே.
சீன சார்புக் கொள்­கையில் அமிழ்ந்து கொண்­டி­ருந்த இலங்­கையை, அதி­லி­ருந்து மீட்டு, தனது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்­காக தலை­யீடு செய்ய இந்­தியா முனை­யலாம் என்­ப­தற்­கான வாய்ப்பும் இருந்­தது.
தாம் ஆட்­சிக்கு வந்தால், சீனா­வுடன் செய்து கொள்­ளப்­பட்ட முறை­கே­டான உடன்­பா­டு­களை ரத்துச் செய்யப் போவ­தா­கவும், கொழும்பு துறை­முக நகர அமைப்புத் திட்­ட த்தை கைவிடப் போவ­தா­கவும், மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்டோர் கூறி வந்­தனர்.
எனவே, தனது உற்ற நண்­ப­னாக விளங்­கிய மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்­கத்தைப் பாது­காக்க, சீனாவும் தலை­யீடு செய்­வ­தற்கு வாய்ப்­புகள் இருந்­தன.
அது­போ­லவே, மேற்­கு­ல­குடன் முரண்­பாட்டை வளர்த்துக் கொண்­டி­ருந்த இலங்கை, ரஷ்யா, சீனா உள்­ளிட்ட வீட்டோ அதி­காரம் கொண்ட நாடு­களின் நிழலில் இருந்து கொண்டு வாலாட்­டு­வதை அந்த நாடுகள் சகி த்துக் கொண்­டி­ருக்கும் என்றும் கருத முடி­யாது.
எனவே, இலங்­கையை வழிக்குக் கொண்டு வர, ஆட்­சி­மாற்­றத்தை ஏற்­ப­டுத்த மேற்­கு­லக நாடுகள் முயற்­சிக்­கலாம் என்ற வாய்ப்பும் இருந்து வந்­தது.
மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் கொள்ள வேண்டும் என்­பது போல, உலகின் ஒரு பகுதி நாடு­க­ளுடன் சரி­யான உற­வு­களை பேணிக் கொள்ள முடி­யாத இலங்­கைக்கு, வெளி­நாட்டு தலை­யீ­டுகள் குறித்த அச்சம் எழுந்­தி­ருந்­ததில் ஆச்­ச­ரி­ய­மில்லை.
ஆனால், மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்கம் பிர­சாரக் கூட்­டங்­களில் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தது போன்று, தேர்தல் நட­வ­டிக்­கை­களில் வெளி­நா­டு­களின் தலை­யீ­டுகள் இருக்­க­வே­யில்லை என்றே கூறலாம்.
இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்­கத்­தை­யிட்டு அது திருப்தி கொள்ள முடி­யா­விட்­டாலும், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மீது முழு­மை­யாக நம்­பிக்கை வைப்­ப­தற்கு அது தயா­ராக இருக்­க­வில்லை.
பல்­வேறு முரண்­பா­டான கொள்­கை­களைக் கொண்ட கட்­சி­க­ளுடன் கூட்­டணி வைத்துக் கொண்­டுள்ள அவரால், இந்­தியா எதிர்­பார்க்கும் அனைத்­தையும் நிறை­வேற்றிக் கொள்ள முடி­யுமா என்ற சந்­தேகம் இந்­தி­யா­வுக்கு இருந்­தது.
எனவே, இந்த தேர்­தலில் யாரையும் ஆத­ரிக்­கவோ, யாரையும் விமர்­சனம் செய்­யவோ இந்­தியா தயா­ராக இருக்­க­வில்லை.
பொறு­மை­யாக இருந்து தேர்தல் முடி­வு­களை அறிந்து ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வா­கின்­ற­வ­ருடன் பேசிக் கொள்­ளலாம் என்ற முடிவை எடுத்து விட்­டது.
2010 ஜனா­தி­பதி தேர்­தலில், சரத் பொன்­சே­கா­வுக்கு அமெ­ரிக்கா ஆத­ர­வ­ளிக்க முனைந்து, இரு­த­ரப்பு உற­வு­களில் முரண்­பா­டுகள் நீடித்து வரு­வதை இந்­தியா அறியும். எனவே தான், இலங்­கை­யுடன் எத்­த­கைய நிலை­யிலும் உற­வுகள் குழப்­ப­ம­டைந்து விடக் கூடாது என்­பதில் இந்­தியா மிகக் கவ­ன­மாக இருந்­தது.
அதே­வேளை, மஹிந்த ராஜ­பக்ச அர­சாங்கம் தோல்வி காணக் கூடாது என்று சீனா விரும்­பி­யி­ருந்­தாலும், வெளிப்­ப­டை­யாக அதற்கு ஆத­ரவு தெரி­விக்க சீனா முன்­வ­ர­வில்லை.
அது மஹிந்த ராஜ­பக்சவை எதிர்க்கும் நாடு­களைத் தூண்­டி­விட்­ட­தாக அமைந்து விடும் என்று சீனா கரு­தி­யி­ருக்­கலாம்.
எனினும், மஹிந்த ராஜ­பக்சவின் வெற்­றிக்­காக சீனா இர­க­சி­ய­மான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருக்­கலாம் என்ற கருத்து உள்­ளது. அதே­வேளை, அமெ­ரிக்­காவோ, பிரித்­தா­னி­யாவோ, மேற்­கு­லக நாடு­களோ தேர்­தலில் தாக்கம் செலுத்தக் கூடிய வகையில் எந்தக் கருத்­தையும் கூற­வில்லை.
காரணம், இலங்­கை­யுடன், மேற்கு நாடுகள் அர­சியல் ரீதி­யாக நல்­லு­றவை கொண்­டி­ருக்­க­வில்லை.
கடந்த முறை சரத் பொன்­சே­காவை அமெ­ரிக்கா வெளிப்­ப­டை­யாக ஆத­ரிக்க முற்­பட்­டமை, பல எதிர்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.
அதை­விட, ஆட்சி மாற்­றத்தை விரும்பும் மேற்குலக நாடு­களின் எந்தக் கருத்­தையும், அர­சாங்கம் திரித்துக் கூறி, பிர­சா­ர­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்ளும் ஆபத்தும் ஏற்­பட்­டி­ருந்­தது. எனவே தான், பிரித்­தா­னியா எதையும் கூற­வில்லை.
அமெ­ரிக்கா கூட கடைசி நேரத்தில் தான் அமை­தி­யான தேர்­தலை வலி­யு­றுத்­தி­யது.
ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூன் நீதி­யான, நியா­ய­மான, சுதந்­தி­ர­மான தேர்தல் நட த்­தப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யதைக் கூட ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி கண்­டனம் தெரி­வித்­தி­ருந்­தது. பான் கீ மூனின் சொந்த நாடான தென்­கொ­ரி­யாவில் வாக்­கு­ரிமை அளிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே, இலங்­கை­யர்கள் வாக்­கு­ரி­மையை பெற்­று­விட்­டனர்.
அந்­த­ள­வுக்கு முதிர்ந்த ஜன­நா­யகக் கட்­ட­மைப்பைக் கொண்ட எமக்கு ஆலோ­சனை கூற முன்னர், தீர விசா­ரிக்க வேண்டும் என்று பதி­லடி கொடுத்­தி­ருந்­தது ஆளும்­கட்சி.
மீண்டும் அதே கருத்தை ஐ.நா. பொதுச்­செ­ய­லரின் பேச்­சாளர் கூறிய போது, ஆளும்­கட்சி கூறிய பாணி­யி­லேயே வெளி­வி­வ­கார அமைச்சும் பதில் கொடுத்­தது.
அது­போ­லவே, சுதந்­தி­ர­மான வெளிப்­ப­டை­யான தேர்­தலை வலி­யு­றுத்தி ஐரோப்­பிய ஒன்­றியம் வெளி­யிட்ட அறிக்­கைக்கும் வெளி­வி­வ­கார அமைச்சு பதி­லடி கொடுத்­தி­ருந்­தது.
அதா­வது தேர்தல் தொடர்­பாக இலங்­கையின் எல்­லை­க­ளுக்கு வெளியே இருந்து எந்தக் கருத்து வந்­தாலும் அதனை விச­னத்­து­ட­னேயே பார்த்­தது மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம்.
இத்­த­கைய நிலையில் பெரும்­பா­லான நாடு கள் எந்தக் கருத்­தையும் கூறாமல் அமை­தி­யாக இருந்து விட்­டன.
அர­சாங்கம் பிர­சாரம் செய்­தது போன்று, இந்த தேர்­தலில் வெளி­நாட்டுத் தலை­யீ­டுகள் ஏதும் இருக்­க­வில்லை என்றே கூறலாம்.
ஆனாலும், இந்த தேர்­தலில் இப்­போது எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற்று விட்­டாலும், சர்­வ­தேச சமூகத்துக்குப் பதிலளிக்க வேண்டிய சில பிரச்சினைகளை அவர் எதிர்கொண்டேயாக வேண்டும்.
அதில் முக்­கி­ய­மா­னது, தற்­போது ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும், போர்க்­குற்­றங்கள் குறித்த விசா­ரணை.
இந்த விசா­ரணை அறிக்கை வரும், மார்ச் மாதம் 25ம் திகதி ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.
மைத்­தி­ரி­பால சி­றி­சே­னவின் அர­சாங்கம் ஜெனீவா­வு­டனோ அல்­லது ஐ.நாவு­டனோ ஒத்­ து­ழைக்கும் அள­வுக்கு இணங்கிப் போகப் போவ­தில்லை என்­பதே உண்மை.
சர்­வ­தேச விசா­ர­ணையை அவர் ஏற்­க­னவே நிரா­க­ரித்து விட்டார்.
அதே­வேளை, உள்­நாட்டுப் போர்க்­குற்ற விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்­கு­வ­தாக கூறி­யி­ருந்­தாலும் அதனை அவரால் உட­ன­டி­யாகச் செய்­வது கடினம்.
இந்­த­நி­லையில், ஜெனீவா என்பது அவரது அரசுக்கும் சோதனைக்குரிய களமாகவே இருக்கப்போகிறது

ad

ad