யாழ். புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி 2015 நேற்று முன்தினம் 14.02.2015 சனிக்கிழமை முற்பகல் 9.30மணியளவில் பாடசாலை மைதானத்தில் கல்லூரியின் முதல்வர் திரு. நா.நாகராசா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினரான திரு. உயர்-திரு ஜி.வி இராதாகிருஷ்ணன் (ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் தீவக வலயம்) அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக அருள்நிதி சி.முருகானந்தவேல் (பேராசிரியர் மனவளக்கலை, கொழும்பு), திரு.பொ.சிவானந்தராசா (கோட்டக்கல்விப் பணிப்பாளர், வேலணை), திரு.எஸ்.கே. சண்முகலிங்கம் ஜே.பி (இளைப்பாறிய அதிபர், யா. புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம்) ஆகியோரும்,
கௌரவ விருந்தினர்களாக செல்வி பொ.ஜமுனாதேவி(அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம், புங்குடுதீவு), திருமதி தனபாலன் சுலோசனா (பொருளாளர், புங்குடுதீவு அபிவிருத்தி மக்கள் ஒன்றியம்) திருமதி ம. கிறிஸ்ரியன் (செயலாளர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம்) திரு.சி. திருலிங்கநாதன் (பொருளாளர் பாடசாலை பழைய மாணவர் சங்கம்) ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வின் இறுதியில் பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்த நிகழ்வினில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர்.
தகவல் & படங்கள்…
அமரர் சேனாதிராஜா குடும்பம் -புங்குடுதீவு.
அமரர் சேனாதிராஜா குடும்பம் -புங்குடுதீவு.