புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2015

மஹிந்த அரசாங்கத்திற்கு நெருக்கமான சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஓய்வு

ஒரு தொகுதி சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 22ம் திகதி சில முக்கிய இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளனர்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க எதிர்வரும் 22ம் திகதி ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளார்.
கூட்டுப்படைகளின் பிரதானி ஜகத் ஜயசூரியவும் எதிர்வரும் 22ம் திகதி ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளார்.
ஜகத் ஜயசூரியவிற்கு பதிலாக விமானப்படைத் தளபதி கோலித குணதிலக்க நியமிக்கப்பட உள்ளார்.
வன்னிப் போருடன் தொடர்புடைய மேஜர் ஜெனரல் உள்ளிட்ட மேலும் ஐந்து சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளும் எதிர்வரும் 22ம் திகதி ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களே இவ்வாறு ஓய்வு பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கம் இவர்களின் சேவைக் காலத்தை நீடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad