புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2015

மயூரன் சுகுமாரனுக்கு இன்னும் சில மணி நேரங்களி்ல் மரண தண்டனை.


258fd3d
இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருவரும் மரண தண்டனை விதிக்கப்படும் தீவிற்கு கொண்டு செல்லப்படுவதாக இந்தோனேசிய மற்றும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஆண்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாரன் (ஈழத்
தமிழர்) ஆகிய இருவரும் அங்கு கொண்டு செல்லப்பட்டதும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரண தண்டனையை நிறுத்த வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப் போவதாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டு இருந்த 2 குற்றவாளிகளும் பாதுகாப்புப் படையினரும் இரண்டு விமானங்களில் ஏற்றிச் செல்லவுள்ளனர். அதற்காக 100 பொலிசார், தண்ணீர் பாச்சும் வாகனங்கள், கவசவாகன இராணுவ படைப்பிரிவு பாலி கெரோபொகன் சிறைச்சாலைக்கு வெளியியே காவல் காத்து நிற்கிறது. பாலி விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்படும் இருவரும் விமான மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்ள இந்தோனேசியாவின் மத்திய யாவா நுஸகம்பகன் தீவுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்…

ad

ad