புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2015

இன்று வரும் சுஷ்மாவுடன் தமிழ்க் கூட்டமைப்பு பேசும்


இன்று இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை சந்தித்துப் பேசவுள்ளது.

 
எதிர்வரும் 13ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருகின்றார். அவருக்கு முன்ன தாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகின்றார்.
 
சுஷ்மா வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர்  இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும். கொழும்பு வரும் அவர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
 
நாளை சனிக்கிழமை அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொழும்பில் சந்திப்பார்.
 
இந்தியப் பிரதமருடன் பேசப்படவுள்ள விடயங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பு நடைபெறும். கடந்த ஆண்டு இந்தியாவுக்குக் கூட்டமைப்பு சென்றபோது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad