புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2015

இரவிலும் தியாகு அலுவலகத்தில் காத்துகிடக்கும் தாமரை!



சென்னை: தியாகு செய்த தவறை இப்போதே வெளிப்படையாக கூற விரும்ப வில்லை என்று 3வது நாளாக தர்ணா போராட்டம் செய்து
வரும் கவிஞர் தாமரை கூறி உள்ளார்.
பிரபல சினிமா பாடலாசிரியரும் பெண்ணியவாதியுமான தாமரை, தனது கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி தனது மகனுடன் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். சூளைமேடு பெரியார் சாலையில் இருக்கும் தியாகுவின் கட்சி அலுவலகத்தின் முன்பாக கடந்த 27 ஆம் தேதி முதல் அவர் மேற்கொண்டு வரும் தர்ணா போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்த் திரையுலகின் பிரபலமான பாடலாசிரியர் தாமரை. இவரும் தமிழ்த் தேசியவாதியும், பெரியாரிஸ்ட்டுமான தோழர் தியாகுவும் கடந்த 2001ல் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். ஏற்கனவே திருமணமாகி கருத்துவேறுபாட்டில் மனைவியை பிரிந்து வாழ்ந்த தியாகு, தாமரை வீட்டாரின் சம்மதத்தின்படி அவரை மணந்தார். இவர்களுக்கு சமரன் என்ற 7 வயது மகன் உள்ளான்.

இந்நிலையில், கடந்த 2012ல் அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு தியாகு, தாமரையுடன் வசித்து வந்த வீட்டிலிருந்து வெளியேறினார். அப்போது, தோழர் தியாகு மற்றும் தாமரையின் நெருங்கிய நண்பர்கள், அவர்களிடையே கலந்து பேசியதையடுத்து அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழத்து வங்கினர். ஆனாலும், நண்பர்களின் இந்த முயற்சி தோல்வி அடைந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றிற்காக தஞ்சை செல்வதாக சென்ற தியாகு, அதன்பின் தாமரையுடன் எந்தவித தொடர்பினையும் ஏற்படுத்திக்கொள்ள வில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த விவகாரம் வெளியே தெரியாதபடி இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதமாக கணவர் தியாகு, என்னையும், எனது மகனையும் தவிக்க விட்டுவிட்டு ஓடிவிட்டார் என்று குற்றஞ்சாட்டி தனது மகனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கவிஞர் தாமரையின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தியாகு அளித்த விளக்கத்தில், ''நான் எங்கும் ஓடி ஒளிய வில்லை. தாமரையுடன் சேர்ந்து வாழும் எண்ணம் இல்லை. சட்டப்பூர்வ தீர்வு தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். நானாக நீதிமன்றத்திற்கு செல்லமாட்டேன். அவர் விவாகரத்து கேட்டால் மனசு ஒத்து கொடுக்க தயாராக உள்ளேன். மகனே சமரா, உன்னிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், இன்று 3வது நாளாக தனது மகனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாமரை கூறும்போது, ''தியாகு சொல்வது போல சட்டப்பூர்வமான தீர்வுக்கு நான் தயாராக இல்லை. எனக்கு தேவை சமூக தீர்வுதான். மகன் சமராவிடம் மன்னிப்பு கேட்பதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அவன் மன்னிக்க மாட்டேன் என்று கூறிவிட்டான்.

பிரபலமான தமிழ் கவிஞரான நான் இப்படி போராட்டத்தில் ஈடுபடுவது ஏன்? என்பது பற்றி, தமிழ் உணர்வாளர்களே தியாகுவிடம் கேட்க வேண்டும். இதற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை எனது போராட்டம் நீடிக்கும். நான் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்தது தியாகுதான். அது என்ன? என்பது பற்றி இப்போதே வெளிப்படையாக கூற நான் விரும்ப வில்லை.

நேற்றைய இரவும், முழுப் பகலும் இங்கே கழிந்தன. குழந்தை சமரனுடன் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. நீண்ட நாட்களாக அவன் என்னுடன் சேர்ந்து படிக்க விரும்பிய ஒரு சித்திரக்கதையின் பல பக்கங்களை நேற்று இரவு படிக்க முடிந்தது. இன்று இரவு, முடிந்த வரை மீதிப் பக்கங்களைப் படிக்கலாம் என்று சொல்லி இருக்கிறேன். தமிழ் உணர்வாளர்கள் பலரும் நேரிலும் தொலைபேசியிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நியாயம் கிடைக்கும் வரை எனது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை" என்றார்.

ad

ad