புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மே, 2015

பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை! மைத்திரிக்கு அறிவிக்கும் மஹிந்த
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரியப்படுத்துவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கும் போது மஹிந்த இதனை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காகவே அவர் ஜனாதிபதியுடன் சந்திப்பை கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை தாம் இழக்க நேரிடும் என்ற காரணத்தினாலேயே பொதுத்தேர்தல் போட்டியை மஹிந்த தவிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சில கட்சிகள் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராகவும், கோத்தபாய ராஜபக்ஷவை முன்னணி வேட்பாளராகவும் நிறுத்தி பொதுத்தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

ad

ad