புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மே, 2015

மருமகளுக்கு பாலியல் தெந்தரவு தந்த ஜெ பேரவைசெயலாளர்
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் கே.ஜீ.சிங்காரவேலன். பல்லாவரம் நகர ஜெயலலிதாபேரவை செயலாளராக உள்ளார்.
இவரது மகன் விவேகானந்தன்க்கும் இவருக்கும் இடையே சொத்துதகராறு இருந்துள்ளது. அதோடு, சிங்காரவேலன் மருமகளுக்கு பாலியல் தொல்லை தந்துவந்ததாகவும் கூறப்படுகிறது. சிங்காரவேலன் மகள் சரண்யாமருமகன் ரகு என்ற ரகுராகவன் ஆகியோர் சிங்காரவேலனுக்கு ஆதரவாக ஷாலினியைவீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியில் தள்ளி மானப பங்கப்படுத்திகொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பல்லாவரம் போலீசில் ஷாலினி புகார் செய்துள்ளார். புகாரில்தனது மாமனார் தனியாக இருக்கும் போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்தான் சம்மதிக்காததால் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டதாகவும் கூறியிருந்தார்.இந்தப் புகார் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்துஷாலினி தாம்பரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில்நான்கொடுத்த புகாரின் மீது பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்ய உத்தர விடவேண்டும்என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்ஷாலினி கொடுத்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுபோலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து பல்லாவரம் போலீசார்சிங்காரவேலன்,அவரது மகள் சரண்யாமருமகன் ரகு ராகவன் ஆகிய 3பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில்காஞ்சிபுரம்மாவட்டம்பல்லாவரம் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில்இருந்த சிங்காரத்தைநீக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா இன்று அதிரடிஉத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாஇன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில், “காஞ்சிபுரம்கிழக்கு மாவட்டம்,பல்லாவரம் நகர ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர்பொறுப்பில் இருக்கும் கே.ஜி.சிங்காரம் இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்துவிடுவிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.

ad

ad