2வது இன்னிங்சில் வங்கதேசம் 23 ரன்கள் எடுத்தபோது 5ம் நாள் ஆட்ட நேரம் முடிந்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 462 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வங்கதேசம் முதல் இன்னிங்சில் 256 ரன்னில் ஆட்டமிழந்து பாலோ ஆன் பெற்றது. பதுல்லாவில் 4 நாளாக பெய்த மழையால் ஆட்டம் பெருமளவு பாதிக்கப்பட்டது. கடைசி நாளான இன்றும் மழை பெய்ததால் ஒரு மணி நேரம் ஆட்டம் நடைபெறவில்லை.
அடுத்து வங்கதேச அணியுடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆட உள்ளது.