புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2015

மகளைக் காணவில்லை ; சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு


பெண்ணொருவரை நேற்றுமுதல் காணவில்லை என பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 
பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,
 
யாழ்ப்பாணம், சுன்னாகம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ஸ்டெலா (வயது 20 ) நேற்று காலை அயலிலுள்ள தேவாலயத்திற்குச் சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
 
 
தேடிய போதும் தகவல் எதுவும் தெரியவில்லை எனவும் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

ad

ad