புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2015

மகிந்தவுக்கு தேசியப் பட்டியலோ, வேட்பு மனுவோ இல்லை!

நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு வழங்குவதற்கு இன்னும் எதுவும் மிச்சம் இல்லை என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

 
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் தெரிவிக்கையில்,
 
மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரோ அல்லது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுவோ அல்லது தேசியப் பட்டியல் வாய்ப்போ வழங்குவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad