புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2015

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடவில்லை: மேர்வின்


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் தான் கையெழுத்திடவில்லை என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய மாநாயக்கர் கலகம ஜ அத்ததஸ்சி தேரரை நேற்று சந்தித்து ஆசி பெற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மிகவும் ஞானமிக்க பிரதமர் ஒருவர் நாட்டில் தோன்றியுள்ளதாகவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான தானே இதனை கூறுவதாகவும் இவற்றை கூற தான் அஞ்சவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் கையெழுத்திடவில்லை. கையெழுத்திடப் போவதுமில்லை என்றும் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad