புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2015

மஹிந்தவின் சூழ்ச்சிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் சமலிடம்


தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தரப்பின் பல பொறுப்புகள் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் மூத்தவரான சமல் ராஜபக்ச ஊடாக மஹிந்த ராஜபக்ச தரப்பினரால் மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருக்கும் செயற்பாடுகளை இடைநிறுத்துவதே இதன் நோக்கம் என சுதந்திர கட்சியின் உள் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச தரப்பினர் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தினுள் தனியாக ஒரு செயற்பாட்டினை மேற்கொள்வதற்கும் அதன் ஊடாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சமல் ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருப்பது அரசாங்கத்திற்கு சாதகமாக இருப்பதோடு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முழுமையான இணக்கப்பாடுகளுக்கமைய இவ் பொறுப்பினை சமல் ராஜபக்ச ஏற்று கொண்டுள்ளார் என தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு மஹிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளை தன்னால் மேற்கொள்ளப்படும் என சமல் ராஜபக்ச உத்தியோகபூர்வமற்ற சான்றிதழ் ஒன்றினையும் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ad

ad