புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2015

காங்கிரஸ் கட்சியினருக்கும் அதிமுகவினருக்கும் நடந்த மோதலில் போர்க்களமாக காட்சியளித்த திருச்சி

திருச்சியில் காங்கிரஸ் கட்சியினரும், அதிமுகவினரும் மோதிக் கொண்டதில் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்துள்ளது.
பிரதமர் மோடி - முதலமைச்சர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டங்கள், உருவபொம்மை எரிப்பு என போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில் திருச்சி மெயின்காட் கேட் அருகே, கோட்டை ரயில் நிலைய சாலையிலுள்ள திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாசல மன்றத்தை, இன்று 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர், முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, அங்கே கூடவே, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கும்பலில் அதிமுகவினர் கல், செருப்பு, போன்றவற்றை வீச அதிமுகவினர் அக்கம்பக்கம் கடைகளில் இருந்த முட்டை, தக்காளிகளை வீசியுள்ளனர்.
பின்னர் பொலிசார் தடியடி நடத்தி கல்வீச்சை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும், 100க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்து திருச்சி தேவர் ஹாலில் அடைத்து வைத்தனர்.
இந்த சம்பவங்களால் மலைக்கோட்டை அருகே உள்ள பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

ad

ad