புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2015

சென்னையில் ஏ.ஆர்.ரகுமானுடன் சச்சின்


 
சென்னையில் நடந்த ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் சென்னை வந்தார். அவர் கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ர குமான் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். 

ஏ.ஆர்.ரகுமான் அவரை வரவேற்றார். அப்போது ஏ.ஆர்.ரகுமானின் தாயாரும் வீட்டில் இருந்தார். தெண்டுல்கரும், ஏ.ஆர்.ரகுமானும் நீண்ட நேரம் பேசினார்கள். ஏ.ஆர்.ரகுமானிடம் தெண்டுல்கர் எப்படி இசையமைக்கிறீர்கள் என்பதை நான் பார்க்க ஆவலாக உள்ளேன் என்றார். உடனே ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது எப்படி என்று அவருக்கு சொல்லிக் கொடுத்தார். 

டியூன் போடுவது எப்படி என்று சில பிரத்தியேக டியூன்களையும் அவர் போட்டுக் காண்பித்தார். இதை தெண்டுல்கர் ரசித்தார். இந்த சந்திப்பு முடிந்ததும் தெண்டுல்கர் கூறுகையில், ‘‘நான் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகர். மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்தேன்’’ என்றார். பின்னர் தெண்டுல்கர் சென்னையில் கிரிக்கெட் பயிற்சி மைதானத்துக்கு சென்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த வீரர்களை சந்தித்தார். அவர்களுக்கு விளையாட்டு நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தார்.

ad

ad