டெல்லியில் இருந்து பதன்கோட் சென்ற பிரதமரை பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிரவாதிகள் ஊடுருவிய பாதை மற்றும் தாக்குதல் நடத்திய இடங்கள் விமானப்படை தளவாடங்கள் வைக்கபட்டிருக்கும் பகுதிகள் போன்றவற்றை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த விதம் குறித்து அதிகாரிகள் விவரித்து கூறினர்.
பிரதமர் மோடி பதன்கோட் வந்திருப்பதையொட்டி விமானப்படை தளத்தில் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் பஞ்சாப்பையொட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையோரத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.