புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2016

பழ.கருப்பையா வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல்



அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா, ஆளும் அரசு மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை செய்துவந்தார்.  இந்நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு ஆட்டோவில் மர்ம நபர்கள், பழ.கருப்பையாவின் வீட்டின் கண்ணாடிகளையும், காரின் கண்ணாடிகளையும் கல்வீசி தாக்குதல் நடத்தி விட்டு சென்றுவிட்டனர்.  இது குறித்து பழ.கருப்பையா போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து கடந்த புதன் கிழமை நீக்கப்பட்ட சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ பழ.கருப்பையா அதிமுக அரசையும் முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழ.கருப்பையாவின் வீட்டின் மீது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு தாக்குதல் நடத்தினர். 

அவரது வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியெறிந்ததில் கடுமையாக சேதம் அடைந்தன. இந்த தாக்குதல் குறித்து நமது செய்தியாளரிடம் பேசிய பழ கருப்பையா இரவு 11 மணி அளவில் ஆட்டோ ஒன்றில் 4 பேர் வந்ததாகவும், மோசமான வார்த்தைகளால் தன்னை திட்டியதாகவும் குறிப்பிட்டார். 

அப்போது வீட்டின் வாசலில் இருந்த தனது மகன், விளக்குகளை அணைத்துவிட்டு, கதவை தாழிட்டதாகவும், இதனையடுத்து கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாகவும் பழ. கருப்பையா தெரிவித்தார்.   இத்தகைய தாக்குதல்களைப் பார்க்கும்போது, ‘’ இது நாடா அல்லது காடா’’ என்ற எண்ணம் ஏற்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
 

ad

ad