புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2016

ஆண்டுக்கு லட்சம் எலிகளை ஒழிக்கும் கிட்டி தொழில்

ன்று வேளாண் துறையில் எவ்வளவோ நவீன தொழில் நுட்பங்கள் வந்திருந்தாலும் நெற்பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்த
நவீனத்தை விஞ்சும் அளவிற்கு உள்ளது பழைமையான தொழில்நுட்ப முறையான கிட்டி(பொறி) தான்.

தற்போது சாகுபடி செய்துள்ள சம்பா நெற்பயிர்களை எலிகள் கடித்தும், நெல் வயலில் தண்ணீரில் தத்தளிக்காமல் இருக்க  நெற்பயிரை மடித்து வைத்தும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் ஏக்கருக்கு சுமார் 20 சதவீதம் சேதம் ஏற்படுகிறது.
இந்நிலையில், எலிகளை கட்டுப்படுத்த வேளாண் துறையில் பல வகையான விஷ மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.  மேலும், வயல்களில் எலிகளை பிடித்து உணவாக்கிக் கொள்ளும் ஆந்தை உள்ளிட்ட பறவைகள் அமர்வதற்காக பறவைகள் இருக்கை அமைப்பது குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.

இருப்பினும், அவற்றையெல்லாம் விஞ்சும் அளவிற்கு தமிழகத்தில் ஒரு சமூகத்தினரால் மூங்கில் குச்சிகளால் வடிவமைக்கப்பட்ட கிட்டிகளை (பொறி) கொண்டு வயல்களில் எலிகளை பிடித்து அழிக்கப்படுகின்றன. தற்போதுஅதற்தான சீசன் தொடங்கியுள்ளதால் கிட்டி முறையிலான எலி ஒழிப்பு முறையை பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து கிட்டி முறையில் எலி ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள அறிவொளி நகரைச் சேர்ந்த  என்.ரவி கூறுகையில், ''அறிவொளி நகரில் சுமார் 30 குடும்பத்தினர் இந்த தொழிலையே பாரம்பரியமாக செஞ்சிட்டு வர்றோம். என்கிட்ட சுமார் 400 கிட்டிகள் உள்ளன. தேவையான கிட்டிகளை மூங்கில் குச்சிகளைக் கொண்டு நாங்களே  வடிவமைத்துக்கொள்வோம்.
ஏக்கருக்கு 300 கிட்டிகள் நட்டால் ஓரளவு எலிகளை பிடித்து அழித்து விடலாம். இதற்கு விவசாயிகளிடமிருந்து ஒரு கிட்டிக்கு 4 ரூபாய் வாடகையாக வாங்குகிறோம். வயலில் முதல்நாள் அரிசி உள்ளிட்ட தீவனம் இட்டு கிட்டிகளை ஊன்றிட்டு வீட்டுக்கு போயிடுவோம். மறுநாள் வந்து கிட்டிகளை எடுப்போம். ஆண்டுக்கு சம்பா மற்றும் கோடை காலத்தில மட்டும் எங்களுக்கு வேலை இருக்கும். என்னிடமுள்ள 400 கிட்டிகளைக்கொண்டு ஆண்டுக்கு சுமார் 6,000 எலிகளை பிடித்துவிடுவோம். அதேபோல, எங்கள் தெருவில் உள்ளோரிடமுள்ள சுமார் 10,000 கிட்டிகள் கொண்டு ஆண்டுக்கு சுமார் லட்சம் எலிகளை பிடித்து அழித்து வருகிறோம். இந்த முறையில் தமிழகமெங்கும் எலி பிடித்து ஒழிக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நெல்லில் ஏற்படும் இழப்பு தடுக்கப்படுகிறது'' என்றார்.

மேலும், இது குறித்து வீரராகவபுரத்தைச் சேர்ந்த விவசாயி கே.கார்த்திகேயன் கூறுகையில், ''எலி மருந்துகளை வரப்போரங்களில் வைக்கலாம். ஆனால், நடவு செய்துள்ள இடங்களில் வைக்க முடியாது. அப்படி வைத்தாலும் முழுமையாக அழிக்க முடியவில்லை. வேறெந்த தொழில்நுட்பமும் அரசு எங்களுக்கு தெரிவிக்கவில்லை. கிட்டி முறையிலேயே எலிகளை அழித்து வருகிறோம்.

ஏக்கருக்கு 35 மூட்டைகள் விளையுமென்றால், அதில் 6 மூட்டை நெல் எலியால் வீணாகும். இதன் மூலம் ரூ. 5,500 இழப்பு ஏற்படும்.  இதுதவிர, வைக்கோலும் வீணாகும். ஆகையால், கிட்டிகள் முறையில் எலிகளை ஒழிப்பதற்கு ரூ. 1,200 மட்டுமே செலவாகுமென்பதால் இதை பயன்படுத்துகிறோம்'' என்றார்.

குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற பழங்கால முறையே சிறந்தது.

ad

ad