வடமாகாண ஆளுநர் பதவியை நான் எதிர்ப்பார்த்திருக்கின்றேன். ஆகவேஇவிரைவில் குறித்த பதவி எனக்கு
கிடைக்கப்பெறும் என்று நம்புகின்றேன். அந்த பதவி கிடைக்குமிடத்து அதனை பொறுப்பெடுத்து செயற்படுவேன் என்று முன் னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே மேலும் பதிலளிக்கையில்,
நான் எந்த சந்தர்ப்பத்திலும் பட்டம் பதவிகளுக்கு ஆசைப்படவில்லை. எனக்கு எந்த பதவி கிடைக்கிறதோ அதனை ஏற்று பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவேன். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் நான் செயற்படுவேன்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் போது கட்சியின் நிறைவேற்று குழு கூட்டத்தின் போது நானும், டிலான் பெரேராவும் அதாவுட செனவிரத்னவும் அதிகார பரவலாக்கத்தின் அவசியத்தை அச்சமில்லாமல்
எடுத்துரைப்போம்.
என்னுடைய கொள்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் மாற்றம் ஏற்படப் போவதில்லை. நாட்டிற்கு மேலும் சேவை
செய்வதற்கு தயாராகவே உள்ளேன்.
இந்நிலையில், வடமாகாண ஆளுநர் பதவியை நான் எதிர்பார்த்திருக்கின்றேன். ஆகவே, விரைவில் குறித்த பதவி எனக்கு கிடைக்கப்பெறும் என்று நம்புகின்றேன். அந்த பதவி கிடைக்குமிடத்து அதனை பொறுப்பெடுத்து செயற்படுவேன் என்றார்.