புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2016

தொடர் பாலியல் துன்புறுத்தல் கணவரின் தம்பி உறுப்பை வெட்டி போலீஸ் நிலையம் சென்ற பெண்


மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டம் சுர்காட் பகுதியில் 32 வயது பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
கணவர்  மராட்டிய மாநிலம் நாசிக்கில் வேலைபார்த்து வந்தார். கணவரின் தம்பி அந்த பெண்ணின் குடும்பத்துடன் இருந்து வந்தார். 

கனவரின் தம்பி அடிக்கடி அந்த பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு உள்ளார். நேற்றும் இது போல் அந்த பெண்ணை வலுகட்டாயபடுத்தி உள்ளார். அந்த பெண் அவருக்கு சம்மதிப்பதுபோல் நடித்து அவரது மர்ம உறுப்பை அரிவாளால் வெட்டி கையில் எடுத்து கொண்டு தனது 3 குழந்தைகளுடன் அருகே  உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்து உள்ளார்.  

போலீசார் சம்பவ இடத்திற்கு வரும் முன் பெண்ணின் கணவரின் தம்பி வீட்டு அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கு மாட்டி  தற்கொலை செய்து கொண்டார். போலீசார் பெண்ணின் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்து உள்ளனர்.

மாவட்ட போலீஸ் அதிகாரி அமீத் கான் கூறும் போது இது ஒரு வித்தியாசமான வழக்கு. அந்த பெண் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த பெண் இந்த செயலில் எந்த வருத்தமும் அடையவில்லை. அவருக்கு மன நிலை நன்றாக உள்ளது என கூறினார்.

ad

ad