புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2016

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மலையக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் ; ராஜாராம்

வடக்கிலுள்ள தமிழ் மக்களுடைய காணிகளை ஜனாதிபதி கையளிப்பது போல அரசியல் கைதிகளையும் அவர்களின் உறவினர்களிடம்
கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நுவரெலியா கந்தப்பளை பாக் தோட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றஇளைஞர்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
குற்றமற்றவர்கள் என இனம் காணப்பட்டவர்கள் கூட தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அல்லது இவர்களுக்கு வழக்கு தாக்கல் செய்வதற்குநாடாளுமன்றத்தின் ஊடாக விசேட ஏற்பாடு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மலையக இளைஞர்களும் அரசியல் கைதிகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் மலையக மக்கள் ஒரு சமூக ரீதியில் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக  குரல் கொடுக்க வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

ad

ad