புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2016

மாணவர்களை நிர்வாணமாக்கி தண்டனை அளித்த ஆசிரியர்கள்: மும்பையில் கொடூரம் (வீடியோ இணைப்பு)

வீட்டுப்பாடம் எழுதாத இரண்டு மாணவர்களை நிர்வாணமாக்கி தண்டனை அளித்த இரண்டு ஆசிரியர்கள் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் சில நாட்களாக வகுப்பறையின் வெளியே இரண்டு மாணவர்கள் நிர்வாணமாக நிற்பது போன்று வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தனியார் சமூக சேவை அமைப்பு ஒன்று உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணையில், இந்த சம்பவம் மும்பை மலாடு மேற்கு மால்வாணி கேட் பகுதியில் இயங்கி வரும் தனியார் பயிற்சி வகுப்பில் நடந்தது தெரியவந்தது.
உடனடியாக சம்பந்தப்பட்ட பயிற்சி வகுப்புக்குச் சென்ற பொலிசார், அங்கு விசாரணை நடத்தியதில், வீட்டு பாடத்தை எழுதாததால் 2 சிறுவர்களையும் தண்டிக்கும் வகையில் ஆசிரியர்கள் கணேஷ்நாயர், சரோஜ் ஜெய்ஸ்வாஸ் ஆகியோர், அவர்களை வகுப்பின் வெளியே நிர்வாணமாக நிற்கவைத்தது உறுதியானது.
இதையடுத்து அந்த இரண்டு ஆசிரியர்கள் மீதும் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad