புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2016

சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபாய் பணம் கொள்ளை

சென்னை எழும்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள
பணம் கொண்டுவரப்பட்டரயில் பெட்டி

சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஐ.ஓ.பி. வங்கியுடன் சேர்த்து மற்ற வங்கிகளின் பணமும் ரயிலில் கொண்டுவரப்பட்டது. 266 பெட்டிகளில் பல கோடி ரூபாய் பணம் கொண்டு வரப்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் வந்தவுடன் பார்த்தபோது பணம் இருந்த பெட்டி உடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. கொள்ளை போன பணம் எவ்வளவு என்று மதிப்பிடவில்லை. கொள்ளை நடந்த சம்பவம் குறித்து ரிசர்வ் வங்கி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சேலத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு புறப்பட்ட இந்த பயணிகள் ரயில் ஆத்தூர், விருத்தாசலம் விழுப்புரம் வழியாக சென்னை வந்தது. பணம் இருந்த ரயில் பெட்டிக்கு ஒரு டி.எஸ்.பி. 4 எஸ்.ஐ. துப்பாக்கியுடன் காவல் இருந்தனர். எஞ்சினுக்கு அடுத்த ரயில் பெட்டியில் பணப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் ஒடும் ரயிலில் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். 

ரயிலில் பணம் வருவதை முன்கூட்டியே அறிந்த நபர்களே, நடுவழியில் நள்ளிரவில் பணம் இருந்த பெட்டிக்குள் நுழைந்து தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர் என்று கூறப்படுகிறது. 

ரயிலில் வந்த பணம் கிழிந்த நோட்டுகள் என்றும், அவை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பதற்காக கொண்டு வந்தது, கொள்ளையர்கள் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.

ad

ad