புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2016

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர்கள், தொண்டர்கள் திரண்டனர்

ADMK13

 தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை முன்பு, தமிழக
அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும், ஏராளமான தொண்டர்களும் திரண்டனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு  மருத்துவர்கள் அளித்த சிகிச்சையின் பலனாக அவர் தற்போது பூரண குணமடைந்துள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்த தகவல் அறிந்ததும், தமிழக அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும், ஏராளமான தொண்டர்களும் நேற்று இரவு முதலே மருத்துவமனை வளாகத்தில் குவியத் தொடங்கினர். அவர்கள் அனைவரும், முதல்வர் ஜெயலலிதா நலம் பெற்று வீடு திரும்ப கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ad

ad