புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2016

ஐம்பது கோடி பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள் திருட்டு: யாஹூ நிறுவனம் ஒப்புதல்

புகழ்பெற்ற இணைய சேவை நிறுவனமான யாஹூவில் கணக்கு வைத்திருக்கும் ஐம்பது கோடி பயனாளர்களின்
தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட விபரத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற இணைய சேவை நிறுவனங்களில் யாஹூவும் ஒன்று. இந்நிறுவனம் மூலம் பலர் மின்னஞ்சல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பயனப்டுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நிறுவனத்தில் கணக்கு  வைத்திருக்கும் ஐம்பது கோடி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்ற விபரத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
யாஹூவின் தகவல் சேகரிப்பு மையத்தில் இணைய தகவல் திருடர்கள் செய்த தொழில்நுட்ப திருட்டு ஒன்றை விசாரிக்கும் போதுதான் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய பாதுகாப்பபு குறைபாட்டு பிரச்சினையாக கருதப்படும் இதை குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் செய்து இருக்கலாம் என்று யாஹூ கருத்து தெரிவித்துள்ளது. 
திருடப்பட்ட தகவல்களில் பயனாளர்களின் கணக்கை சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் பயனாளர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள், பிறந்த தேதி, கடவுச் சொற்கள், மற்றும் பாதுகாப்பு கேள்விகள் மற்றும் பதில்கள் ஆகிய விபரங்கள்  அடங்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ad

ad