கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைபரிசில்பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் 195 புள்ளிகளை பெற்று கோகுலதாசன் அபிசிகன் முதலிடத்தை பெற்றுகொண்டார்.
மேற்படி மாணவன் தற்போதைய நிலவரப்படி வடமாகாணத்தில் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அபிசிகனின் தந்தையான கோகுலதாசன் மற்றும் தாயார் சுதர்ஷினி ஆகியோர் மேற்படி பாடசாலையின் ஆசிரியர்களாவர்.
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இம்முறை அண்ணளவாக 170 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
மேற்படி மாணவன் இந்த பெறுபேற்றினை பெற்று கொள்ள தனக்கு வழி காட்டியாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கும் பெற்றோர் மற்றும் சகோதரனுக்கும் தன்னுடன் பரீட்சையில் தோற்றிய சக வகுப்பு தோழர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் மேலும் எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து இந்த சமூகத்துக்கு சேவையாற்ற விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.