புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2019

வெள்ளைக்கொடி தொடர்புடைய குரல் பதிவுகள் உள்ளது ; பொன்சேகா

வெள்ளைக்கொடி விவகாரத்துடன் தொடர்புடைய குரல் பதிவுகள் தன்னிடம் உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா சில இராணுவ அதிகாரிகள் யுத்த மீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கான சாட்சியங்களும் தன்னிடம் இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“வெள்ளைக்கொடிச் சம்பவத்துடன் தொடர்புடைய குரல் பதிவுகள் என்னிடம் இருக்கின்றன. தேவையான நேரத்தில் அவற்றை முன்வைக்கத் தயாராக உள்ளேன்.

மேலும் இறுதி யுத்தத்தின் போது இராணுவ அதிகாரிகள் சிலர் மேற்கொண்ட யுத்த மீறல் நடவடிக்கைகள் சம்பந்தமான காணொளிகளும்என்னிடம் இருக்கின்றன. அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்” – என்றார்

ad

ad