குறித்த திருமண நிகழ்வுக்குச் சென்று,அன்றிரவு முழுவதும் வீடு திரும்பாததால் மாணவனை உறவினர்கள் தேடிவந்த நிலையில் கிணறு ஒன்றிலிருந்து இன்று (சனிக்கிழமை) மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர், தருமரபுரம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மோகநாதன் தர்சன் (வயது-18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் தருமபுரம் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்