யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் தென்னிலங்கையைச் சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் ஒருவர் நேற்று மாலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.அவர் மது அருந்தும் நோக்கில் தப்பி சென்ற நிலையில் அப்பகுதி மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். எனினும் தப்பி ஓடிய நபரை மடக்கிப் பிடித்த ஊர் மக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பினை பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.