பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் வனிதா விஜயகுமார். இவரது சினிமா வாழ்க்கை தாண்டி சொந்த வாழ்க்கை பற்றிய செய்திகள் தான் அதிகம். அண்மையில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் பீட்டர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது மகள்களும் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டிருந்தனர்.
ஆனால் பீட்டரின் முதல் மனைவியால் வனிதா சில பிரச்சனைகளை சந்தித்தார். தற்போது வனிதா தனது 3வது கணவர் பீட்டர் பாலை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கோவா சென்ற இடத்தில் பீட்டர் அதிக மது அருந்தி இருந்ததால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு அவரை வீட்டைவிட்டு வனிதா அனுப்பியதாக கூறப்படுகிறது