கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான எல்லை வழியான பயணகளுக்கான தடை நான்கு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21 வரை அமெரிக்காவுடன் அத்தியாவசியமற்ற பயணக் கட்டுப்பாடுகளை நீடித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கனேடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க கிடைக்கக்கூடிய சிறந்த பொது சுகாதார ஆலோசனையின் அடிப்படையில் தொடரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்