புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2021

வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி -தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில்

www.pungudutivuswiss.com
அரோராவேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி அளிக்கபடும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறி உள்ளார்

தமிழகத்திற்கு இதுவரை மொத்தம் 15 சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. இந்த ஆண்டு (2021) நடை பெற இருப்பது 16 சட்டமன்ற பொதுத் தேர்தல் ஆகும்.

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் அட்டவணையை வெளியிடுகிறார். அதற்காக அவர் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்து வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-


கொரோனாவில் இருந்து உலகமே மீண்டு வரும் ஆண்டாக 2021 உள்ளது.கொரோனா உச்சத்தில் இருந்த 2020ம் ஆண்டே சட்டப்பேரவை தேர்தலை நடத்தியுள்ளோம்.

கொரோனா சூழலில் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை உள்ளது.கொரோனா சூழலில் அதற்கு ஏற்ற வகையில் தேர்தலுக்கு சில முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது.

கொரோனா சூழலிலும் பீகார் தேர்தலில் அதற்கு முந்தையை தேர்தலை விட அதிக வாக்குகள் பதிவாகின .

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே தேர்தல் ஏற்பாடுகளை துவங்கி கண்காணித்து வருகிறோம். தேர்தல் ஆணைய சிறப்பு அதிகாரி உமேஷ் சின்ஹா ஜனவரி மாதம் முதல் தமிழக தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.மே 31ந் தேதியுடன் அசாம் சட்டப்பேரவை காலம் முடிவடைகிறது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 2.7 லட்சம் வாக்குச் சாவடிகளில் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர் 5 மாநிலங்களில் 824 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

சுமார் 88ஆயிரம் வாக்குச் சாவடிகள் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளன

கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் சுகாதாரத்துறை மூலம் பிரச்சினைகளை சமாளித்து வருகிறோம். தேர்தலை சுமுகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. தேர்தல் பணி ஈடுபடும் ஊழியர்கள், கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு தலைவணங்குகிறோம். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முந்தைய தேர்தல்களை விட 57 சதவீத வாக்குகள் பதிவாகின. பீகாரில் பெருமளவு பெண்கள் வாக்களித்தனர்.

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்கும் முறை ஒரு வாய்ப்பாகவே வழங்கப்படுகிறது

வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி

5 வாகனங்களுக்கு மேல் சென்று பிரசாரம் செய்ய அனுமதி இல்லை

ad

ad