புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2021

உதயன் பத்திரிகையில் தேசிய தலைவர் பிரபாகரனின் படம் பிரசுரித்தமை தொடர்பான வழக்கிலிருந்து சரவணபவனிற்கு விடுதலை

www.pungudutivuswiss.com
உதயன் பத்திரிகையில் தேசிய தலைவர் பிரபாகரனின் படம் பிரசுரித்தமை தொடர்பான வழக்கிலிருந்து உதயன் குழுமத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், ஆசிரியர் பீட பிரதிநிதி திலீப் அமுதன் ஆகியோர் விடுவிக்கப்பட்டடுள்ளனர்.



இன்று யாழ்.நீதிமன்றில் இலங்கை காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சந்தேக நபர்களாக பெயர் குறிப்பிடப்பட்ட உதயன் குழுமத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், ஆசிரியர் பீட பிரதிநிதி திலீப் அமுதன் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.



குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணிகளாகிய கே.வி. தவராசா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணிகளாகிய திருக்குமரன், ஆனோல்ட் பிரியந்தன், கணதீபன், ரிசிகேசன், சலேசியஸ் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

ad

ad