புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2022

ஐ.நாவில் சிறிலங்கா எதிர் (நா) தமிழீழ அரசாங்கம் !! இனியும் தாமதிக்காது ஐ.நா பாதுகாப்பு சபைக்கு மாற்றுங்கள் !! - ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு!

www.pungudutivuswiss.com

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் 46/1 தீர்மானத்தை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சபையில், இனியும் தாமதிக்காது சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி அவர்கள் இடித்துரைத்துள்ளார்.

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் 46/1 தீர்மானத்தை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சபையில், இனியும் தாமதிக்காது சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி அவர்கள் இடித்துரைத்துள்ளார்

இன்று தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையின் 51 கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான அறிக்கையின் போதே இந்நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி தனதுரையில்,

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை இதுவரை தீர்க்கமாக அணுகுமுறையில் செயல்படவில்லை என்று நாங்கள் நம்புகிறோம்.

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு, இனப்படுகொலை சிறிலங்காவை பொறுப்புக் கூற வேண்டும்

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா 30/1, 46/1 தீர்மானங்களை கொண்டு வந்த போதிலும் சிறிலங்கா எதனையும் கவனத்தில் கொள்ளவில்லை. செயற்படுத்துவதற்கான விருப்பத்தையே,நடைமுறைப்படுத்துவதற்கான சரியான திசையோ காட்டியிருக்கவில்லை.

போரின் போது படுகொலைக்கும், வலிந்தும் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான நீதி தேடும் தமிழர்கள் தேடும் முயற்சியில் விரக்தியும் மட்டும் அடையவில்லை தமிழ்மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விரக்தி அடைந்துள்ளனர்.

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஓர் அங்கமாக தமிழர் நிலங்கள் தொடர்ந்து சிறிலங்கா ஆயுதபடைகளுடன் பாதுகாப்புடன் தொடர்ந்து அபகரித்தும், சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டும் வருகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் மேலும் மேலும் காலஅவகாசம் கொடுக்காமல், விரைந்து செயற்படுமாறு சபையினைக் கேட்டுக்கொள்வதோடு, தமிழர்களுக்கு எதிராக தொடரும் கட்டரைமக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுக்கவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் வேண்டுகின்றேன்.

சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு வேண்டுகிறோம். தாமதிக்கப்படட நீதி மறுக்கப்பட்ட நீதியாகிவிடும் என தெரிவித்திருந்தார்.


ad

ad