இன்றையதினம் இலங்கை தொடர்பான விவாதமும் நடைபெறவுள்ளது.
கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று இலங்கை தொடர்பான விபரமான எழுத்து மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிடவுள்ளதுடன் அதன் சாரம்சத்தையும் வாசிப்பார்.
இலங்கை அரசாங்த்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜெனிவா சென்றுள்ள தூதுக்குழுவின் தலைவர் அலிசப்ரி மனித உரிமைப் பேரவையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் உரையாற்றவிருக்கிறார்.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட 17 பக்க எழுத்துமூல அறிக்கையின் சாராம்சம்
- நாடுகளை அடிப்படையாக கொண்ட பொறிமுறைகளை ஆதரிக்கவில்லை என பெலாரஸ் தெரிவிப்பு
- அரசியல்நோக்கங்களை அடிப்படையாக கொண்ட தீர்மானங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுபவை என அந்த நாடு தெரிவித்துள்ளது.
- நாடுகளை அடிப்படையாக கொண்ட தீர்மானங்கள் ஐ.நா. சாசனத்தின் அடிப்படையை மீறுபவையென புரூண்டி தெரிவித்துள்ளது.
- கடந்த தீர்மானம் குறிப்பிட்ட நாட்டின் ஆதரவுடன் நிறைவேற்றப்படாததால் அது பயனுள்ளதாக அமையவில்லை என சிம்பாப்வே தெரிவித்துள்ளது.
- மனித உரிமைகளிற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ள வியட்நாம் இழப்பீடு மற்றும் நிலங்கை விடுவிப்பது குறித்த இலங்கையின் தேசிய முயற்சிகளை அங்கீகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
- இலங்கையில் காணப்படும் மனித உரிமை நிலவரத்தை பெரிது படுத்தும் எண்ணமில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.
- ஐக்கியநாடுகள் மனித உரிமைகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளுடன் இலங்கை தன்னை இணைத்துக்கொள்வது அவசியம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
- முக்கியமான நடவடிக்கையாக இலங்கை நீண்டகாலமாக காணப்படும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் ஊழல் ஆகியவற்றிற்கு தீர்வை காணவேண்டும் எனவும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
- இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி குறித்து கனடா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
- ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அண்மைய தாக்குதல்கள் இலங்கையில் தொடர்ந்து நிலவும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கும் பத்திரிகையாளர்கள், சிவில் சமூகத்தினர் துன்புறுத்தப்படும் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றது என கனடா தெரிவித்துள்ளது.
- அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான இலங்கையின் அணுகுமுறை கடினமாவது குறித்து நியுசிலாந்து கவலை தெரிவித்துள்ளது.
- பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான புதிய அறிவிப்புகளை சுட்டிக்காட்டியுள்ள நியுசிலாந்து சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திவைக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- இலங்கைக்கு தனது தளர்ச்சியற்ற ஆதரவை வெளியிட்டுள்ள பாகிஸ்தான், இலங்கை முன்னெடுத்துள்ள உள்நாட்டு முயற்சிகளை மனித உரிமை பேரவை அங்கீகரிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
- இலங்கை தனது ஆணையை நிறைவேற்ற கால அவகாசம் வழங்கப்படவேண்டுமென துருக்கி தெரிவித்துள்ளது.
- முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாட்டிலிருந்து வெளியேறிய பின்னர் இலங்கை ஜனநாயக ஒழுங்கை ஏற்படுத்தியுள்ளமைக்கு உகண்டா பாராட்டு தெரிவித்துள்ளது.